நாட்டை உலுக்கிய மருத்துவ மாணவி கொலை... தமிழகத்தில் வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்

கொல்கத்தா மருத்துவ மாணவி கொல்லப்பட்டதை கண்டித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசு கடுமையான சட்டங்களையும் நடவடிக்கைகளையும் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்ப​ட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கருப்பு பட்டை அணிந்து நீதி வேண்டி முழக்கங்களை எழுப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com