Sand Smuggling| காவிரியில் மணல் திருட்டை தடுக்க வருவாய் துறையினர் எடுத்த ஆயுதம்

காவிரியில் மணல் திருட்டை தடுக்க வருவாய் துறையினர் எடுத்த ஆயுதம்

காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க ட்ரோன் ஆய்வு நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் மணல் திருட்டைத் தடுக்க, வருவாய்த்துறையினரும், போலீசாரும் ட்ரோன் கேமரா மூலம் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். கீழ்பாலப்பட்டி முதல் காவிரி ஆறு வரையிலான பகுதியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மணல் திருட்டு நடைபெறவில்லை என்பதும், மணல் மூட்டைகள் அல்லது காலி சாக்குகள் பதுக்கி வைக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. மோகனூர் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் போலீசாரும் பங்கேற்றனர். முன்னதாக இதே பகுதியில் ட்ரோன் ஆய்வின்போது 500-க்கும் மேற்பட்ட காலி சாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

X

Thanthi TV
www.thanthitv.com