Protest | "ஓட்டு போடமாட்டோம்.." - திடீரென கொந்தளித்து ஒன்று திரண்ட பொன்னேரி மக்கள்
"ஓட்டு போடமாட்டோம்.."
பொன்னேரி அருகே வீட்டுமனைப் பட்டா கேட்டு, பேரணியாக வந்த பொதுமக்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பட்டா வழங்காததை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.
