பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு

கிருஷ்ணா நதி நீர் வரத்து, மற்றும் மழைப் பொழிவு காரணமாக பூண்டி ஏரியின் நீர் இருப்பு 800 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
Published on

கிருஷ்ணா நதி நீர் வரத்து, மற்றும் மழைப் பொழிவு காரணமாக பூண்டி ஏரியின் நீர் இருப்பு 800 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, சென்னையின் குடிநீர் தேவைக்காக முதல் கட்டமாக பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு செல்லும் அந்த தண்ணீர் பின்னர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும். இதனால் நாளொன்றுக்கு 1 மில்லியன் கன அடி தண்ணீர் புழல் ஏரிக்கு கிடைக்கும்.

X

Thanthi TV
www.thanthitv.com