Tiruppur | அமராவதி அணையில் வீணாகும் நீர் - திடீரென ஆற்றில் இறங்கிய விவசாயிகள்

அமராவதி அணையில் வீணாகும் நீர் - திடீரென ஆற்றில் இறங்கிய விவசாயிகள்

#tiruppur #farmers #thanthitv திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் பழுதடைந்த ஷட்டர் வழியாகத் தண்ணீர் வீணாக வெளியேறுவதைக் கண்டித்து விவசாயிகள் திடீரென ஆற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் தண்ணீர் வெளியேறவில்லை எனக் கூறும் நிலையில், நூற்றுக்கணக்கான கன அடி நீர் வீணாகச் செல்வதை விவசாயிகள் சுட்டிக்காட்டினர். எனவே, சேதமடைந்த ஷட்டரைச் சரிசெய்து நீரை இருப்பு வைக்கவும், காய்ந்துவரும் தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்களைக் காப்பாற்றப் பிரதான கால்வாயில் தண்ணீரைத் திறக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com