பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

பாசனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது.
பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
Published on
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குவது, பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. இந்நிலையில் தற்போது பாசனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையிலிருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. இதனால் கீழ்பவானி ஆற்றில் மட்டும் பாசனத்திற்காக 2 ஆயிரத்து 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com