சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்
Published on

சிவகங்கை மாவட்டம் அருகே கீழப்பூங்குடி ஊர்க்காவலன் நொண்டிக்கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் வடத்தால் கட்டப்பட்ட காளையை 25 நிமிடங்களில் 9 வீரர்கள் கொண்ட குழு அடக்க வேண்டும் என விதிமுறை வைக்கப்பட்டது. இதில் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களை

சேர்ந்த காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். குறித்த நேரத்திற்குள் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியின் போது 2 மாடுபிடி வீரர்கள் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com