Virudhunagar | Fire | விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து | களத்தில் இறங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம்
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து ஊடக செய்திகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆணையம், காயமடைந்தவர்களின் நிலை, விசாரணை முன்னேற்றம் மற்றும் இழப்பீடு விவரங்கள் உள்ளிட்ட முழுமையான அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய தமிழ்நாடு தலைமைச் செயலர் மற்றும் விருதுநகர் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
