நெல்லை சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டு பாதை கோரி, ஏராளமானோர் ஈம சடங்கு செய்யும் பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நூதன முறையில் மனு அளித்தனர். கரிவலம்வந்தநல்லூர் கிராம மக்கள் அளித்த புகார் மனுவில், தங்களது பகுதியில் கழிப்பறைகளையும் அமைத்திட வலியுறுத்தி உள்ளனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ஈமச்சடங்கு பொருட்களுடன் நூதன முறையில் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.