ஆத்திரம் தீர அடித்து கொன்ற கிராம மக்கள்... சிவகங்கை இரட்டை கொ*ல..? பகீர் பின்னணி

x

சிவகங்கை மாவட்டம் அழகமாநகரி கிராமத்திற்குள் புகுந்த இரண்டு பேர், ஆடு, கோழிகளை திருடியதாகத் தெரிகிறது. கோழிகள் கத்தும் சத்தம் கேட்டு அங்கு திரண்ட மக்கள், சாக்கு பைகளில் கோழிகளுடன் இருந்த திருடர்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

மாட்டிக்கொண்டதால் அச்சம் அடைந்த திருடர்கள், கிராமமக்களின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களை விரட்டி பிடித்த அழகமாநகரி கிராமமக்கள், இருவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மூர்க்கத்தனமான தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஆடு திருடர்கள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி காவல்நிலைய போலீசார், இருவர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த இருவரும், கல்லம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் விக்னேஷ் என்பது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக ஊர்மக்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

ஆடு, கோழி திருடிய இருவரை கிராம மக்கள் அடித்து கொன்ற சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்