6 மாதங்களுக்கு குடிநீர் கட்டணம் வசூலிக்க கூடாது - விக்கிரமராஜா

6 மாதங்களுக்கு குடிநீர் கட்டணம் வசூலிக்க கூடாது என வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
6 மாதங்களுக்கு குடிநீர் கட்டணம் வசூலிக்க கூடாது - விக்கிரமராஜா
Published on
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறக்க அரசு அனுமதி வழங்கிய போதும் சில பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையால் வணிக நிறுவங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவித்தார். இதனால் 6 மாதங்களுக்கு குடிநீர் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com