``விக்கிரவாண்டி சிறுமி மரணத்தில் சந்தேகங்கள்’’ - வந்த மனு.. ஐகோர்ட் உத்தரவு
விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம்
விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி - க்கு மாற்றக் கோரி குழந்தையின் தந்தை பழனிவேல் மனு
தமிழக அரசு, காவல் துறை, சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
விக்கிரவாண்டி போலீசார் விசாரணை முறையாக நடக்கவில்லை என சிறுமியின் தந்தை பழனிவேல் மனு மீதான விசாரணை பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு
குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பெற்றோருக்கு முறையாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை - மனு
பள்ளியில் இருந்து 20 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் இருந்தும், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை - மனு
குழந்தை மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை மாற்ற வேண்டும் - மனு
கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் - மனு
