Velmurugan | TVK | "விஜய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை"-பகிரங்க மன்னிப்பு கேட்ட வேல்முருகன்
"விஜய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை"
'மருதமலை மாமணியே' பாடல் சர்ச்சை - மன்னிப்பு கோரிய பாடகர் வேல்முருகன் 'மருதமலை மாமணியே' பாடல் வரிகளில் தவெக தலைவர் விஜயைக் குறிப்பிட்டு பாடியதற்கு பாடகர் வேல்முருகன் மன்னிப்பு கோரியுள்ளார். முருகன் பாடலை அவமதித்ததாக பாடகர் வேல்முருகன் மீது நெல்லை வழக்கறிஞர் குற்றாலநாதன் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், தனது செயல் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாடகர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும், தாம் பாடியதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
