வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்தவருக்கு வாசலிலேயே காத்திருந்த ஆப்பு... கைது வரை சீரியஸான மேட்டர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக ஸ்டேட்டஸ் வைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தப்பேட்டை கூடநகரம் ரோடு பகுதியில் நகைக்கடை வைத்திருப்பவர் கார்த்திக். இவர், தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் கார்த்திக்கை கைது செய்யகோரி, அவரது கடைக்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கார்த்திக் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com