எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் அவலம்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியின் சார்பில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் அவலம்...
Published on
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியின் சார்பில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபட்டுள்ள நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு கவசங்களும் இன்றி கால்வாயின் உள்ளே இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக நவீன கருவிகளை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com