

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெண் தலைமைக் காவலரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த மதுவிலக்கு பிரிவு தலைமைக்காவலர் கலையரசியை அச்சமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துகாரில் முந்தி செல்ல முயன்றபோது இருவருக்கும்
இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது முத்து, கலையரசி கண்ணத்தில் அறைந்ததுடன்மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த
புகாரின்பேரில் அவரை கைது செய்த போலீஸார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.