

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா பயிரிடப்பட்டு உள்ளது. கடும் வெயில் காரணமாக ஏற்கனவே மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரிங் நோய் தாக்கம் காரணமாக மேலும் உற்பத்தி குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேளாண்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.