வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட 10 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது 10 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. காட்பாடி காந்தி நகரை சேர்ந்த பிரவீன் ராஜ் வங்கியில் செலுத்துவதற்காக பணத்தை கொண்டு செல்வது விசாரணையில் தெரியவந்தது. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வேலூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.