Trichy | Car Accident | நடுரோட்டில் திடீரென சீறிப்பாய்ந்த கார் - தெறித்து ஓடிய மக்கள்
நடுரோட்டில் திடீரென சீறிப்பாய்ந்த கார் - தெறித்து ஓடிய மக்கள்
இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் மீது மோதி விபத்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் மேலும் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதிய பிறகே கார் நின்றது. கார் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக பொதுமக்கள் கூறி வரும் நிலையில், கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
