VCK Person Arrest | தென்காசியில் விசிக நிர்வாகி கைது
தென்காசியில் விசிக நிர்வாகி கைது
VCK Person Arrest | தென்காசியில் விசிக நிர்வாகி கைது தென்காசியில் அரசு நில மோசடி வழக்கு- விசிக நிர்வாகி கைது தென்காசியில் அரசு நிலத்தை போலி பத்திரம் செய்து மோசடி செய்ததாக விசிக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தென்காசி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ரீகன் குமார், இரு பெண்களுடன் சேர்ந்து அரசு நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரீகன் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
