கடந்த 2016-ஆம் ஆண்டு வார்தா புயல் வீசியபோது, கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் மாயமாகினர். இதையடுத்து, 9 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த தொகை, இதுவரை வழங்கப்படவில்லை என கூறி, பிரதீப் குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, 4 வாரங்களுக்குள் இது குறித்து பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.