Suyambulingaswamy Temple | வைகாசி விசாக திருவிழா - உவரி கடல் மண்ணை சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
வைகாசி விசாக திருவிழா - உவரி கடல் மண்ணை சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா - உவரி கடல் மண்ணை சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் #SuyambulingaswamyTemple #festival #thanthitv தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றான உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது... விழாவையொட்டி அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு மங்கல இசையுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், உதயமார்த்தாண்ட பூஜைகள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். உவரி கடல் மண்ணை சுமந்து ஏராளமான பக்தர்கள் சேர்த்திக்கடன் செலுத்தினர்.
