சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மத்திய அரசு செயலாளர் ஆய்வு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சுதன்ஸ் பந்த் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை பார்வையிட்ட அவர், எலும்பு மஜ்ஜை மாற்றம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நோயாளிகளுக்கு மத்திய அரசின் 5 லட்சம் காப்பீட்டு திட்டத்தை வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், எவ்வாறு துரிதமாக செயல்படுகிறார்கள் என்பதை கேட்டறிந்ததாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com