உளுந்தூர்பேட்டை = தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள்

Published on

உளுந்தூர்பேட்டை = தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

செங்குறிச்சி தண்டவாள பகுதியில் 2 இளைஞர்களின் சடலங்களை பார்த்த அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சடலங்களை மீட்ட விருத்தாசலம் ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தூக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com