Udumalai | மரத்தில் கட்டி வைத்து கைலியை அவிழ்த்து கொடூரமாய் அடித்த நபர்கள் - அதிர்ச்சி வீடியோ
மரத்தில் கட்டி வைத்து கைலியை அவிழ்த்து கொடூரமாய் அடித்த நபர்கள் - அதிர்ச்சி வீடியோ
Udumalai | மரத்தில் கட்டி வைத்து கைலியை அவிழ்த்து கொடூரமாய் அடித்த நபர்கள் - அதிர்ச்சி வீடியோ உடுமலை அருகே கோழி திருடியதாக இரண்டு இளைஞர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி, இரண்டு இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து சிலர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. மானுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் குமார் மற்றும் கருப்புசாமி ஆகிய 2 இளைஞர்கள் கோழிகள் மற்றும் மின்சார வயரை திருடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரையும் சிலர் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் கார்த்திக்குமார் மற்றும் கருப்புசாமி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்
