ராசிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - 4 இளைஞர்கள் படுகாயம்
ராசிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - 4 இளைஞர்கள் படுகாயம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் காயமடைந்தனர்.
பட்டணம் சாலையில் உள்ள ஏடிஎம் சிட்டி பகுதியில் ஆசிக் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த அன்புச்செல்வன், கார்த்தி, தீபேஸ் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் இரு வாகனங்களிலும் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த நிலையில், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
#namakkal #two-wheeler #accident #thanthitv
