டூவீலர் மோதி விபத்து - சூடான தார் சிதறி சாலை பணியாளர்கள் தீக்காயம்
டூவீலர் மோதி விபத்து
வேலூர் மாவட்டம் உள்ளி பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது, இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மோதியதில், சூடான தார் சிதறி மூன்று தொழிலாளர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற சுரேந்தர், வினித்குமார் ஆகியோரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் முகம், கால்களில் தீக்காயம் ஏற்பட்ட தொழிளாலர்களான பார்த்திபன், ஹரிஷ், பிரகாஷ் ஆகியோரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
