Erode | +2 ரிசல்ட்டுக்காக காத்திருந்த 2 மாணவர்கள் துடிதுடித்து மரணம்

+2 ரிசல்ட்டுக்காக காத்திருந்த 2 மாணவர்கள் துடிதுடித்து மரணம்

Erode | +2 ரிசல்ட்டுக்காக காத்திருந்த 2 மாணவர்கள் துடிதுடித்து மரணம்

#erode #accident #thanthitv

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே லாரி மோதிய விபத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அண்ணாமடுவு பகுதியில் வந்த லாரி, முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் பைக் ஓட்டி வந்த ஜீவன் பிரசாந்த் மற்றும் தேவ் ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பின்னால் வந்த மற்றொரு பைக் மீதும் லாரி மோதியதில் பிரேம் மற்றும் 17 வயது மாணவி நிவி ஸ்ரீ ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்தியூர் போலீசார் லாரி ஓட்டுநர் ஐயப்பனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com