கர்நாடகா டூ கேரளா பறந்த லாரி | கிடைத்த ரகசிய தகவல் | அதிரடியாக தட்டி தூக்கிய போலீசார்
கர்நாடகாவிலிருந்து சேலம் வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட்ட எரிசாராயம்
கர்நாடகாவிலிருந்து கேரளாவிற்கு கொண்டுசெல்லப்பட்ட எரிசாராயம் சேலத்தில் சிக்கியது. கர்நாடகாவிலிருந்து, கேரளாவிற்கு எரிசாராயாம் தொடர்ந்து கடத்தப்படுவதாக கோவை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மத்திய நுண்ணறிவு போலீசார், சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஏர்போர்ட் ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, லாரி மூலம் 555 கேன்களில் கொண்டு செல்லப்பட்ட 19,425 லிட்டர் எரி சாராயத்தையும், லாரியையும் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
