

திருச்சி மாவட்டம் திருப்பராய்துறையில் உள்ள 1300 வருடங்கள் பழமையான அருள்மிகு தாருகாவனேசுவரர் திருக்கோவிலில், அங்காளம்மன், போகசக்தி அம்மன், சண்டிகேசுவரர் சிலைகள் களவு போனதாக ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக திருமாலைக்கட்டி ராமநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். கோயில் செயல் அலுவலர் ஆனந்தகுமார் ராவின் முன் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், கோயில் கணக்கர் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார்.