திருச்சி மாவட்டம், லால்குடியில் தொடர் யோகாசனம் செய்து லிம்கா சாதனை புத்தகத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். இரு கைகளிலும் பூக்களை வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு 21 நிமிடம் மலர் ஆசனம் செய்தனர். இது லிம்கா புத்தகத்தில் இடம்பெறுவதற்கு தேர்வாகியுள்ளது.