சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் சுமார் ஒரு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள அமாவாசை மண்டபத்தில் இணை ஆணையர் முன்னிலையில் கடந்த 12 நாட்களாக
உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 150 கிராம் தங்கமும், 3 கிலோ 580 கிராம் வெள்ளியும்,
103 வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ,489 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story