Trichy Mukkombu | Ayyakannu| திருச்சி முக்கொம்பில் பெரும் பரபரப்பு
Trichy Mukkombu | Ayyakannu| திருச்சி முக்கொம்பில் பெரும் பரபரப்பு
கர்நாடக அரசை கண்டித்து காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றின் நடுவே இறங்கி, அய்யாக்கண்ணு தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், குருவை சாகுபடி பாதிக்கப்பட்டதற்கான இழப்பீட்டை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான நிலுவை காவிரி நீரை தமிழகத்திற்கு உடனடியாக திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
