Trichy | Lorry Accident | வளைவில் திரும்பிய போது மோதிய லாரி | ஸ்பாட்டிலேயே பலியான கணவன், மனைவி
Trichy | Lorry Accident | வளைவில் திரும்பிய போது மோதிய லாரி | ஸ்பாட்டிலேயே பலியான கணவன், மனைவி
டூவீலர் மீது மோதிய லாரி - கணவன், மனைவி பலி திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையில் நெல் ஏற்றி சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். துறையூர் அருகே உள்ள ஆலத்துடையான்பட்டியைச் சேர்ந்த விவசாயி மகாமுனி மற்றும் அவரது மனைவி சரசு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, வளைவில் எதிரே வந்த நெல் லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் தம்பதியினர் உயிரிழந்த நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தங்கராஜை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
