திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்ப்பமாக உள்ள கிருஷ்ணவேணியை 3 நாட்கள், வீட்டிற்கு அனுப்பாமல் போலீசார் விசாரணை நடத்தி வருவது நியாயம் அல்ல என அவரது தந்தை ராஜூ புகார் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்களிடம் இதுவரை எந்தவித விசாரணையும் நடத்தவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.