Trichy | தனியாக இருந்த மூதாட்டி..வீடு புகுந்து மர்மநபர் செய்த செயலால் பெரும் பரபரப்பு

Trichy | தனியாக இருந்த மூதாட்டி..வீடு புகுந்து மர்மநபர் செய்த செயலால் பெரும் பரபரப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கள்ளிப்பட்டி கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியிடம் 24 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோட்டம் அருகே தனியாக வசித்து வந்த சீலம்மாள், இரவு வீட்டில் இருந்தபோது, மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்துள்ளார்.வீட்டில் மாட்டி வைத்திருந்த மஞ்சள் பையில் இருந்த 24 பவுன் நகைகள் மற்றும் செல்போன் திருடிச் சென்றுள்ளார். மூதாட்டியின் புகாரின்பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com