பழங்குடியின பெண்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் மனைவி.. இப்போ நீதிபதி

திருவண்ணாமலையில் பழங்குடியின பெண் நீதிபதி தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். ஜமுனாமரத்தூர் அருகே புலியூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கட்ராமன் மற்றும் ஸ்ரீபதி. இவர்களில் வெங்கட்ராமன் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீபதி, கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், விரைவில் அவர் ஆறு மாத பயிற்சிக்காக செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பலரும் ஸ்ரீபதிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com