எதிர்பாரா நேரத்தில் பைக் மீது பாய்ந்த பேய் மரம்..சிக்கி தவித்த தந்தை மகள்..பயமூட்டும் CCTV

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற தந்தை மற்றும் மகள் மீது ஆலமரக்கிளை முறிந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அம்மன் நகர் பகுதியில் இருந்து அவரது மகள் பூஜாஸ்ரீயை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற அவர்கள் மீது ஆலமர கிளை திடீரென முறிந்து விழுந்தது. இதில் தந்தை, மகள் இருவரும் காயமடைந்த நிலையில், அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்


Next Story

மேலும் செய்திகள்