கம்பியில் சிக்கி துடித்த திருநங்கை பத்திரமாக மீட்பு

கம்பியில் சிக்கி துடித்த திருநங்கை பத்திரமாக மீட்பு
Published on

நெல்லையில் இரும்பு கதவின் கூர்மையான கம்பியில் கை மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிய திரு நங்கையை தீயனைப்பு படை வீரர்கள் பத்திடமாக மீட்டனர். பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் மதுபான கடையின் அருகே உள்ள இரும்பு கதவில் ரேஷ்மா என்ற திருநங்கை ஒருவர் தடுமாறி விழுந்திருக்கிறார். அப்போது கதவில் இருந்த கம்பி அவரது கையில் குத்தி மறுபக்கம் வந்ததால் நகர முடியாமல் தவித்திருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு படை வீரர்கள் அவரை பத்திடமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com