சென்னையில் பாலியல் உறவுக்கு வர மறுத்த நபரை நெஞ்சில் ஏறி மிதித்தே கொன்ற திருநங்கை

சென்னையில், பாலியல் உறவுக்கு வர மறுத்த நபரை அடித்துக்கொன்ற திருநங்கையை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட 45 வயதாகும் ஜான் பாஷா என்பவர், சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் தினக்கூலியாக சாலையோரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், திருநங்கையான கருப்பு என்கிற மலாய்க்கா என்பவர், ஜான் பாஷாவை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். மதுபோதையில் இருந்த ஜான் பாஷா அதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த மலாய்க்கா, ஜான் பாஷாவை கீழே தள்ளி அவரது நெஞ்சில் ஏறி மிதித்து கொன்றுவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து ஜான் பாஷாவின் உடலை கைப்பற்றிய போலீசார், திருநங்கை மலாய்க்காவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com