தேர்தலில் களமிறங்கும் திருநங்கை - தேமுதிக சார்பாக வேட்பு மனு
சேலத்தில் தேமுதிக சார்பாக திருநங்கை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்
சேலத்தில் தேமுதிக சார்பாக திருநங்கை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று மாலையுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற உள்ள நிலையில் பிரதான கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை அந்தந்த மண்டல அலுவலகங்களில் தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில், தேமுதிக சார்பாக 18வது வார்டில் போட்டியிடுவதற்காக திருநங்கை ராதிகா இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
