சித்திரவதை செய்த கணவர் - பெண் காவலர் தற்கொலை
சித்திரவதை செய்த கணவர் - பெண் காவலர் தற்கொலை
சென்னை எழும்பூரில் வசித்து வந்த பெண் காவலர் புவனேஸ்வரி, தமிழக காவல்துறையில் ஆவடி பட்டாலியன் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 2024 ஆம் ஆண்டு சிலம்பரசன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன நாள் முதலே, புவனேஸ்வரியின் மீது சந்தேகம் கொண்டு சிலம்பரசன் தினமும் அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புவனேஸ்வரி தனது நண்பருக்கு பணம் அளித்ததாகவும், அதைத் திருப்பிப் பெற சிலம்பரசன் கட்டாயப்படுத்தியாகவும், இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசனிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
