முக்தி அடைந்தார் மூக்குப்பொடி சித்தர்...

பிரபல சாமியார் மூக்குபொடி சித்தர் இன்று அதிகாலை திருவண்ணாமலையில் முக்தியடைந்தார்.
முக்தி அடைந்தார் மூக்குப்பொடி சித்தர்...
Published on
திருவண்ணமாலைக்கு அடிக்கடி வரும் மூக்குப்பொடி சித்தர், கிரிவலப்பாதை, சாமியார் மடம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சில மாதங்கள் தங்குவது வழக்கம். யாரிடமும் அதிகம் பேசாமலும் , சில சமயங்களில் மட்டுமே பேசும் மூக்குப்பொடி சாமியாரை காண அரசியல்வாதிகள், நடிகர்கள், இசைத்துறையினர் உள்ளிட்டோர் வந்து செல்வதுண்டு. விழுப்புரம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட மூக்குப்பொடி சித்தர், கடந்த சில நாட்களாக கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் மூக்குப்பொடி சித்தர் முக்தி அடைந்தார். அவரது உடலுக்கு எராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மூக்குப்பொடி சித்தரின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com