சீர்காழியில் 1-8ஆம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில், ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், சீர்காழி வட்டத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் காரணமாக, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்