Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2025)| 6 PM Headlines | ThanthiTV

x
  • கரூர் துயர சம்பவத்தின் உண்மை நிலை தெரிய CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்....எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்....
  • கரூர் பிரசாரத்தில் உயிர்சேதம் ஏற்படும் என தவெகவின் ஆனந்த், நிர்மல் குமாரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை...போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது...கால தாமதம் ஆனதால், பல மணி நேரம் காத்திருந்த‌ தொண்டர்கள் சோர்வு அடைந்ததாவும் குறிப்பிடப்பட்டுள்ளது...
  • அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாம‌தம் செய்யப்பட்டதாக எஃப்ஐஆரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது...மரக்கிளைகள் உடைந்து விழுந்த‌தால் கீழே நின்றவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கியதில் 11 பேர் உயிரிழந்ததாவும் கூறப்பட்டுள்ளது...
  • ஒரே இரவில் 39 பேருக்கு எப்படி பிரேத பரிசோதனை நடந்தது? என, தவெக தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்...மக்கள் கூட்டமே விஜய் காலதாமதத்திற்கு காரணம் எனவும், 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்