Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.07.2025) | 6 PM Headlines | ThanthiTV
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு....
வெறும் 22 நிமிடங்களில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் பெருமிதம்....
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மக்களின் மனநிலையை எதிர்க்கட்சிகள் பிரதிபலிக்கவில்லை என ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு.....
எதிரி நாட்டின் எத்தனை விமானத்தை வீழ்த்தினோம் என கேட்காமல் நமது விமானம் எத்தனை வீழ்த்தப்பட்டது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதாகவும் விமர்சனம்.....
பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் நட்புறவுடன் இருக்கவே விரும்புவதாக ராஜ்நாத் சிங் பேச்சு....
பாகிஸ்தானுடன் அமைதியை நிலைநாட்ட தங்கள் அரசும் பல முயற்சிகளை மேற்கொண்டதாக விளக்கம்....
நமது பெண்களின் குங்குமத்தை அழித்தவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி....
மக்களவை விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு....
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் தோல்வியை ஏற்று போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் முன்மொழிந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு...
இந்திய ராணுவ வீரர்களின் வலிமை பறைசாற்றப்பட்டதாகவும் பெருமிதம்....
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் சட்டப்பேரவை அறிவிப்புகளை செயல்படுத்த அரசாணை வெளியீடு....
4 அறிவிப்புகளை செயல்படுத்த அரசாணையை
வெளியிட்டது தமிழ்நாடு அரசு....
தமிழகத்தில் மக்களை மக்களே பாதுகாத்துக்கொள்ளும் ஆட்சி நடைபெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்....
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி என ஈபிஎஸ் அறிக்கை....
திமுக, பாஜக அரசியல் ஆதாய நாடகத்தை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை....
கீழடியில் கிடைத்த ஆதாரங்களை மறைத்து சோழர்களின் பெருமையை தற்போது பேசுவது
பாஜகவின் கபட நாடகம் என தாக்கு....
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்பிக்கள் பதவியேற்பு...
இன்பதுரை, தனபால் ஆகிய இருவருக்கும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்...
நெல்லையில் ஐடி ஊழியர் படுகொலை வழக்கில்
கைதான பெண்ணின் சகோதரர் சுர்ஜித்திற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்...
கைதான சுர்ஜித்தின் பெற்றோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு....
