டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு: "கைதான இரு அரசு ஊழியர்கள், இடைத்தரகருக்கு ஜாமீன் மறுப்பு"

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான இரு அரசு ஊழியர்கள், இடைத்தரகரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு: "கைதான இரு அரசு ஊழியர்கள், இடைத்தரகருக்கு ஜாமீன் மறுப்பு"
Published on
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான இரு அரசு ஊழியர்கள், இடைத்தரகரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் பூர்ணிமா தேவி, விக்னேஷ் மற்றும் இடைத்தரகர் நாராயணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், ஜாமீன் வழங்க கூடாது என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com