

ராமநாதபுரம் பட்டினம்காத்தானை சேர்ந்த மாலாதேவி, குரூப் 2ஏ தேர்வில் மாநில அளவில் 37வது தரவரிசை பெற்று ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக நேரடி நியமனம் செய்யப்பட்டு இருந்தார். முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக பிப்ரவரி மாதம் முதல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.