தமிழகம் முழுவதும் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடை ஊழியர்கள் அடிக்கடி கண், மூக்கு மற்றும் வாய் பகுதியை தொடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை வாசலில் கைகழுவும் வசதி, காய்ச்சல், சளி, இருமல் உள்ள ஊழியர்கள், வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது, கடையின் தரைதளம் மற்றும் அடிக்கடி தொடும் பகுதிகளை நாள் ஒன்றுக்கு 10 முறை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.