TNGovt | Anganwadi | இனி மாதம் ரூ.3,400 உயர்த்தியது தமிழக அரசு

இனி மாதம் ரூ.3,400 உயர்த்தியது தமிழக அரசு

அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி மாத ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அலுவலர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com